News October 22, 2025

அழுதது நடிப்பா? அன்பில் மகேஸ் விளக்கம்

image

கரூர் துயரின்போது அன்பில் மகேஸ் அழுதது ட்ரோல் ஆனது. இதற்கு விளக்கமளித்துள்ள அவர், உணர்ச்சிகளும் அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும் என்றார். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றினால் விலங்குக்கு சமம், அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றினால் மரத்திற்கு சமம் என வள்ளுவர் கூறியதை எடுத்துரைத்தார். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதர், ஒரு மனிதனாக மாற மறந்துவிட்டான் என்றார்.

Similar News

News January 16, 2026

BREAKING: விஜய் முக்கிய முடிவு

image

அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காதது சர்ச்சையாக உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் பேசிய தவெகவின் CTR நிர்மல் குமார், தேவை ஏற்படும் போது நிச்சயமாக விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார் என்றும், அவருக்கு பயம் கிடையாது எனவும் கூறியுள்ளார். ஒருவேளை விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தால் முதல் கேள்வியாக என்ன கேட்கலாம்?

News January 16, 2026

கிஃப்டாக வரும் புத்தகங்களை ஸ்டாலின் என்ன செய்வார்?

image

CM மற்றும் DCM ஆகியோருக்கு கிஃப்டாக வரும் அனைத்து புத்தகங்களும் TN-ல் உள்ள நூலகங்களுக்கு அனுப்பப்படுவதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க விரும்பும் சில புத்தகங்களை மட்டும் தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் என கூறியவர், ஏதேனும் நூலகத்திற்கு புத்தகங்கள் தேவைப்பட்டால், CM, DCM ஆகியோருக்கு கடிதம் எழுதலாம். அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 16, 2026

தென்கொரிய Ex அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

image

தென்கொரிய Ex அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களைத் திரித்து உருவாக்கியது மற்றும் ராணுவச் சட்டத்திற்கு தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற தவறியது ஆகிய குற்றத்திற்காக பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான மிக கடுமையான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!