News October 22, 2025

BREAKING: வேலூர் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஏற்கனவே பள்ளி, கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (அக்.22) வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளை பிற்பகல் 3 மணிக்குள் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். SHARE NOW

Similar News

News October 23, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா ஆகிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 22, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.22) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவர் பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News October 22, 2025

வேலூர்: நெல் நடவு இயந்திரங்கள் வழங்கிய எம்.பி

image

வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும்  வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த், இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, எம்எல்ஏக்கள் அமுலு விஜயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!