News October 22, 2025
BREAKING: இன்றும் ரெட் அலர்ட்.. கனமழை பொளந்து கட்டும்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை(அக்.23) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதுமட்டுமின்றி, அக்.28-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
விஷத்தால் பரிதாபம்.. பொன்னம்பலம் விளக்கம்

பொன்னம்பலம் அண்மையில் வீல் சேரில் இருந்தபடி டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. சொந்த அண்ணனே தனக்கு <<19079575>>விஷம் கொடுத்ததாக<<>> அவர் வேதனையில் கூறியிருந்தார். இந்நிலையில், அதிகளவு மது அருந்தியதாலேயே இப்படி அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் செய்தி பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த பொன்னம்பலம், சிலர் ஆதாரமின்றி குற்றஞ்சாட்டுவதாகவும், அவர்கள் பேசும் கதைகளை கேட்பதற்கு தனக்கு நேரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
கேஸ் கனெக்சனுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

கேஸ் கனெக்சனுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் மட்டுமே மானியம் கிடைக்கும். இதனை செய்ய, முதலில் LPG (HP, Indane, Bharat Gas) வழங்குநரின் இணையதளத்துக்கு செல்லவும் *‘LPG services’-ல் ‘Join DBTL using Aadhaar’ அல்லது ‘Download Forms’-ஐ தேர்ந்தெடுக்கவும் *படிவம் 1 & படிவம் 2 என இரண்டையும் டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்களுடன் படிவம் 1-ஐ வங்கியிலும், படிவம் 2-ஐ LPG விநியோகஸ்தர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கவும்.
News February 11, 2026
BREAKING: தவெகவில் புதிதாக 4 மாவட்டங்கள்!

தவெகவில் மேலும் 4 மாவட்டங்களை உருவாக்கி அதற்கான நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கெனவே அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக உள்ள நிலையில் தற்போது 132 மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்த விவரங்களை அறிய <


