News October 22, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசு புது உத்தரவு

image

மழை குறித்து ‘Red Alert’ எச்சரிக்கை விடுக்கப்பட்டால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Similar News

News October 25, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 25, 2025

CONG-க்கு மரியாதை கொடுத்தால் உழைப்போம்: MP

image

காங்கிரஸுக்கு உரிய மரியாதை அளிப்பவர் தான் தமிழ்நாட்டின் CM ஆக முடியும் என அக்கட்சி MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மரியாதை கொடுக்காதவர்கள் எதிர்க்கட்சி தலைவராகவே திருப்தி அடைய வேண்டியதுதான் எனவும், உரிய மரியாதை அளித்தால் ராகுல், பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸில் குரல் எழுந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

நெல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்

image

ஜப்பான், சவுதி, ஈராக், சீனா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக, இந்திய அரசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தேவ் கார்க் தெரிவித்துள்ளார். மேற்கூறிய நாடுகள் ₹1.80 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா அல்லாத பிற நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா 172 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!