News October 22, 2025
திருச்சி அருகே சோகம்: மின்னல் தாக்கி பலி

திருச்சி மாவட்டம், இருங்களூர் ஊராட்சி புறத்தாக்குடி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் இரண்டு காளை மாடுகளை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் எதிர்பாராத விதமாக காளைகள் மீது மின்னல் தாக்கியதில், 2 காளைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 5, 2026
திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

திருச்சி மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News February 5, 2026
திருச்சி: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 5, 2026
திருச்சி: 53,873 பேருக்கு மகளிர் உதவித்தொகை வழங்கல்

திருச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்த ஜூலை.15 ஆம் தேதி முதல் நவ.4 ஆம் தேதி வரை சாதி சான்றிதழ், வருமான, சான்றிதழ், பட்டா மாறுதல், கலைஞர் மகளிர் உரிமை தொகை என 80,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்த 53,873 மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


