News October 22, 2025
BREAKING: நீலகிரி சுற்றுலாத் தளங்கள் மூடல்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழை பெய்துகொண்டே இருப்பதால், மலைப்பாதையில் அவர்கள் ஊர் திரும்புவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
Similar News
News January 16, 2026
வேலை கிடைக்காததற்கு இது தான் காரணமா?

இந்தியாவில் உள்ள 75% கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கவில்லை என TeamLease EdTech ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1,071 கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 16.67% கல்லூரிகளில் படித்தவர்கள் தான் பட்டம் பெற்ற 6 மாதங்களுக்குள் வேலை பெறுகின்றனர். பாடத்திட்டம், தொழில்துறை தேவைக்கு இடையேயான இடைவெளியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
News January 16, 2026
தேமுதிக பிடிவாதத்தால் EPS அப்செட்

தேமுதிகவின் சமீபத்திய கடலூர் மாநாட்டில் கட்சி நிர்வாகிகளே எதிர்பாரத வகையில் பெரும் கூட்டத்தை பிரேமலதா கூட்டிவிட்டார். அதை காரணம் காட்டி, பாமகவை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படி கொடுத்தால், வடமாவட்டங்களில் பாமகவை கூட்டணியில் சேர்த்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என EPS கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 16, 2026
உழவுத் தோழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்

உழவுத் தோழர்களுக்கு பகிர வேண்டிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள் இதோ *உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்.. *உழவுக்கு உறுதுணை புரியும் மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி உரைத்துப் பொங்கலிடும் நாள், மாட்டுப் பொங்கல் திருநாள்! *இது உழவர்களின் தோழனை கொண்டாடும் திருநாள், அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


