News October 22, 2025

மழை பாதிப்பு: டெல்டாவுக்கு விரையும் இபிஎஸ்

image

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்புகளைப் பார்வையிட இன்று(அக்.22) EPS நேரில் செல்கிறார். தஞ்சாவூர் அம்மாபேட்டை புத்தூர், நல்ல வன்னியன் குடிகாடு, காட்டூர் மற்றும் திருவாரூரில் மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நேரில் ஆறுதல் கூற உள்ளார்.

Similar News

News January 24, 2026

பாடகி ஜானகியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு விளக்கம்

image

மகன் <<18931928>>முரளி கிருஷ்ணா<<>> இறந்த துக்கத்தில் பாடகி எஸ்.ஜானகி மறைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தியுள்ள ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா, குடும்பத்தினர், நண்பர்களின் அரவணைப்பில் எஸ்.ஜானகி நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் வதந்தி பரப்பப்படுகிறது. தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

News January 24, 2026

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

image

பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 17 நாள்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே <<18942504>>சிறப்பு மதிப்பெண்கள்<<>> மூலம் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என CM ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர்.

News January 24, 2026

3-வது பிரசவத்துக்கு சம்பளத்துடன் விடுமுறை

image

பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி ஐகோர்ட்டில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இனி, இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!