News October 22, 2025

கிருஷ்ணகிரி: 4 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

image

கிருஷ்ணகிரியை அடுத்த புதிய பாஞ்சாலியூா் யாசின் நகரைச் சோ்ந்த எல்லம்மாள் (50), அவரது மகள் சுசிதா (13) ஆகியோரை கடந்த 26-ஆம் தேதி கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் நவீன்குமாா் (21), சத்தியரசு (24), ரக்ஷித் (21), பருவீதி கிராமத்தைச் சோ்ந்த ஆதி (20) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 24, 2025

கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்ட அரசு அலுவலர் கைது!

image

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியை அடுத்த நாடுவானப்பள்ளியைச் சேர்ந்தவர் மங்கம்மா. இவர் மாடு வாங்குவதற்கு அரசு வழங்கும் கடனுதவியை அளிக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேப்பனப்பள்ளியை அடுத்த தடத்தரையில் வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றும் முருகேசனை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று. அக்.23 கைது செய்தனர்.

News October 24, 2025

கிருஷ்ணகிரி: EB பிரச்சனையா..? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே<<>> கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 24, 2025

கிருஷ்ணகிரியில் 101 ஏரிகள் நிரம்பின!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 101 ஏரிகள் முழுமையாகவும், 77 ஏரிகள் நிரம்பும் தருவாயிலும் உள்ளன. 110 ஏரிகள் பாதிக்கும் மேல் நிரம்பி உள்ளன. 288 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 446 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 218 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தொடர் மழையால் ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!