News October 22, 2025
வேலூரில் 300 ஏக்கர் சாமை பயிர் சேதம்

வேலூர்: ஒடுகத்தூர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் ஒடுகத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள தீர்த்தம், கொட்டாவூர், கெங்கசாணிகுப்பம், சேர்பாடி, வண்ணாந்தாங்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த சாமை பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News October 22, 2025
வேலூர்: நெல் நடவு இயந்திரங்கள் வழங்கிய எம்.பி

வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த், இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, எம்எல்ஏக்கள் அமுலு விஜயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News October 22, 2025
வேலூர்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
BREAKING: வேலூர் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஏற்கனவே பள்ளி, கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (அக்.22) வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளை பிற்பகல் 3 மணிக்குள் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். SHARE NOW