News October 22, 2025

கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்நிலையில், மாநில கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். மழை நிலவரம், பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினரை வேகமாக செயல்படவும் உதயநிதி அறிவுறுத்தினார்.

Similar News

News October 22, 2025

பள்ளி விடுமுறையில்… மாணவர்களுக்கு உத்தரவு

image

மழைக் காலத்தையொட்டி பள்ளி விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, விடுமுறை நாள்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், அங்கு குளிப்பதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மாணவர்கள் செல்வதை தவிர்ப்பதற்கு பெற்றோர்களும் HM-களும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE

News October 22, 2025

தீபாவளியில் மக்கள் அதிகம் வாங்கியது இதைதான்!

image

நடப்பாண்டு தீபாவளி விற்பனை ₹6.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மக்கள் அதிகம் வாங்கிய பொருள்களை தேசிய வணிகர்கள் சங்க கூட்டமைப்பு (CAIT) பட்டியலிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மளிகை, உணவுப்பொருள்கள் 12% விற்பனையாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக, தங்கம் உள்பட நகைகள் 10%, எலக்ட்ரானிக்ஸ் 8%, ஆயத்த ஆடைகள் 7%, ஃபர்னிச்சர் உள்பட வீட்டு உபயோக பொருள்கள் 5%, ஜவுளி 4% விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News October 22, 2025

உங்க குழந்தைகள் இத சாப்பிடுறாங்களா? உஷார்!

image

உங்கள் குழந்தைகளுக்கு பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்களை வாங்கி தரீங்களா? இன்னைக்கே இதை நிறுத்துங்க. பேக் செய்யப்பட்ட/பதப்படுத்தப்பட்ட சிப்ஸ்களால், எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், இளம் வயதிலேயே சுகர் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த சிப்ஸ்களை தயாரிக்கும் எண்ணெயால் இதய பிரச்னைகள் கூட வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கிறாங்க. SHARE.

error: Content is protected !!