News October 22, 2025

கரூர்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி!

image

கரூர்: தான்தோன்றிமலையை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் கவுசிக்குமார்(17). இவர், பசுபதிபாளையத்தில் உள்ள, தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று(அக்.21) தான்தோன்றிமலையில் உள்ள, இறைச்சி கடையில் தற்காலிக வேலைக்கு சென்று கோழியை சுத்தம் செய்ய, மெஷினை இயக்க சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 24, 2025

கரூர்: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து வரும் நவ்.11ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

News October 24, 2025

அக்.31 கடைசி அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டமான PM-YASASVI-Top Classes Education in schools for OBC, EBC & DNT students-இன் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

கரூரில் மின் தடை அறிவிப்பு..உங்கள் ஏரியா இருக்கா?

image

ஆண்டிசெட்டிப்பாளையம் துணை மின்நிலையம், ராஜபுரம் துணை மின நிலையம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையம், தென்னிலை துணை மின் நிலையம்,நொய்யல் துணை மின் நிலையம் ஆகிய துணை மின்நிலையம் இன்று மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!