News October 22, 2025
மதுரை: வெடி வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம்..சிறுவன் பலி

திருமங்கலம் உச்சபட்டியை சேர்ந்த ரவிக்குமார் மகன் ரிஷிதரன் 7 அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். தீபாவளியையொட்டி நேற்று நண்பர்களோடு உச்சப்பட்டி மருதகாளி கோவிலில் அருகே வெடி வைத்துவிட்டு ஓடிய போது திறந்து கிடந்த தொட்டிக்குள் தவறி வந்த விழுந்த போது உள்ளே கிடந்த கண்ணாடி பாட்டில்கள் அவர் மீது குத்தியதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 22, 2025
JUST IN மதுரை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
மதுரையில் பட்டாசு வெடித்த 35 பேர் மீது வழக்கு

மதுரையில் தீபாவளி அன்று ஒலி எழுப்பும் பட்டாசு வெடிக்க மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் பல இடங்களில் விதிமீறியும் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் ஐராவதநல்லூர் தெப்பக்குளம் நரிமேடு தல்லாகுளம் மண்மலைமேடு மெயின் ரோட்டு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்ததாக 20 பேரும், மதுரை மாவட்டத்தில் பேரையூர் உள்பட 15க்கு மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
News October 22, 2025
மதுரை: பட்டாசு விபத்து மருத்துவமனையில் 25 பேர் அனுமதி

மதுரை தீபாவளி அன்று காலை 7:00 மணி முதல் நேற்று (அக். 21) காலை 7 மணி வரை பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்த ஒரு பெண் உள்பட 30 க்கு மேற்பட்டோர், மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர் இவர்களில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சை தீக்காய பிரிவுகள் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு சிறுவனுக்கு விரல் நுனி துண்டாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மூன்று பேர் கண் மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.