News October 22, 2025
விருதுநகரில் சோகம்… சுவர் இடிந்து விழுந்து கல்லுாரி மாணவி பலி

திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகள் பவானி 17. சிவகாசி தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்து வந்தார். தொடர் மழை பெய்து வருவதாலும் வீரமணியின் வீடு வாறுகாலை ஒட்டி அமைந்துள்ளதாலும் சுவர் பலவீனமடைந்துள்ளது. இருநாட்களுக்கு முன் காலை 10:00 மணிக்கு பவானி வீட்டில் இருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
Similar News
News October 24, 2025
விருதுநகர்: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

விருதுநகர் மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <
News October 24, 2025
ஸ்ரீவி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு சிறை

அருப்புக்கோட்டை பகுடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியின் தந்தை மற்றும் குற்றத்தை மறைத்ததாக தாயையும் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.தாய் விடுவிப்பு.
News October 24, 2025
சிவகாசியில் 2 நாளில் 140 டன் குப்பைகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் கடந்த 2 நாட்களில் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


