News October 22, 2025
தென்காசி: மதுபோதையில் காவலர் தகராறு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்தில் காவலர் ஏட்டாக பணிபுரியும் பிரிட்டோ (40), தீபாவளியன்று மது அருந்திவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். மருதம்பத்தூரில் பிரகலாதன் வீட்டிற்கு பிரிட்டோ சென்று தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் ஏட்டு பிரிட்டோ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News October 22, 2025
உதவித்தொகை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க 31.10.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தென்காசி : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News October 22, 2025
BREAKING: ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு பேரூராட்சி தலைவராக சுதா மோகன்லால் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் வீட்டு வரி செலுத்தாத காரணத்தினால் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஆலங்குளம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.