News October 22, 2025
சேலம்: 4 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அகரமகால் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்க வைக்க போதுமான முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News October 22, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 22, 2025
BREAKING: ஏற்காடு செல்ல தடை!

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, சேலம்-ஏற்காடு மலை சாலை மற்றும் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 22.10.2025 மாலை 7 மணி முதல் 24.10.2025 வரை போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஏற்காடு பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 22, 2025
சேலம் மாவட்டத்தில் அவசர எண்கள் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், சேலம், ஏற்காடு, ஆத்தூர், காடையாம்பட்டி, மேட்டூர், வீரபாண்டி, வாழப்பாடி, தாரமங்கலம், பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் அவசரகால உதவி எண்கள் வட்டாட்சியர் அலுவலக பகுதிகளும், தொலைபேசி எண்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ளார். அவசர உதவிக்கு சேலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் 0427 2452202,1077 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளவும்.