News October 22, 2025
திண்டுக்கல்லில் 40 பேருக்கு தீக் காயம்!

தீபாவளியன்று கவனக்குறைவால் பட்டாசு வெடித்ததில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் காயமடைந்தனர். நிலக்கோட்டை, நத்தம், ஆத்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழனி ஆகிய பகுதிகளில் 13 அரசு மருத்துவமனைகளில் 28, திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் என 40 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (23.10.2025) ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் மேட்டுப்பட்டி; உயிர்த்த ஆண்டவர் மக்கள் மன்றம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் தாளையூத்து; அரசு மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர் வட்டாரத்தில் கூவக்காபட்டி; சமுதாய கூடம், வெள்ளைய கவுண்டனூர், வத்தலகுண்டு வட்டாரத்தில் விருவீடு எஸ்.எம்.மஹால், இடங்களில் முகாம்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
News October 22, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று அக்டோபர்-22 புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News October 22, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தினமும் விழிப்புணர்வு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இன்று அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் “மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம். விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் இதனைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.