News October 22, 2025
JUST IN: நாமக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் மாநகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலுக்கு எதிரே எழுந்துள்ள, உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், ஐப்பசி மாதத்தின் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு சொர்ண அபிஷேகம் இன்று (22.10.2025) காலை நடைபெற்றது. அப்போது தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
News October 22, 2025
வேளாண் பயிர்களின் களை மேலாண்மை பயிற்சி!

நாமக்கல் லத்துவாடி அருகேயுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (அக்.23) காலை 10 மணி முதல் 4 மணி வரை வேளாண் பயிர்களின் களை மேலாண்மை பற்றிய இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பு முனைவர் செ.அழகுதுரை தலைமையில் நடைபெறுகிறது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் தொலைபேசி எண்களை 04286-266345, 99430 08802 தொடர்புகொண்டு முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை!

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது. இதனிடையே கொல்லிமலையில் பெய்து வரும் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க நாமக்கல் மாவட்ட வனத்துறை தடைவித்துள்ளது.