News October 22, 2025
மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் உருவாங்கியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க!
Similar News
News October 22, 2025
மயிலாடுதுறையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொய்வின்றி நெல் கொள்முதல் செய்யும் பணிக்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
News October 22, 2025
மயிலாடுதுறை: 10th பாஸ் போதும்… வேலை ரெடி!

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க*
News October 22, 2025
அமைச்சரை வரவேற்ற மாவட்ட பொறுப்பு அமைச்சர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்கினை, இன்று அமைச்சர் பெருமக்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதனை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வருகை புரிந்துள்ள உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் சந்தித்து வரவேற்றார்.