News October 22, 2025
கடலூர்: மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலை சேர்ந்தவர் சம்பத்குமார்(57). இவர் சாவடி சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால் திடீரென்று பிரேக் போட்ட சம்பத்குமார் தவறி கீழே விழுந்தார்.
இதில், காயமடைந்த அவரை மருத்துவமனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
கடலூர்: 6 பேர் அதிரடி கைது

நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று (ஜன.24) நெய்வேலி ஆர்ச்கேட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசாவை சேர்ந்த அபிலாஷ் குரு (28), அலிசா (24), மந்தாரக்குப்பத்தை சேர்ந்த குட்டி தேவா (எ) வந்தியதேவன் (24), வடக்கு வெள்ளூர் சுதாகர் (27), மண்டை ஓடு (எ) சந்துரு (26), ஜீவா (25) ஆகியோரை கைது செய்தனர்.
News January 25, 2026
கடலூர்: 6 பேர் அதிரடி கைது

நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று (ஜன.24) நெய்வேலி ஆர்ச்கேட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசாவை சேர்ந்த அபிலாஷ் குரு (28), அலிசா (24), மந்தாரக்குப்பத்தை சேர்ந்த குட்டி தேவா (எ) வந்தியதேவன் (24), வடக்கு வெள்ளூர் சுதாகர் (27), மண்டை ஓடு (எ) சந்துரு (26), ஜீவா (25) ஆகியோரை கைது செய்தனர்.
News January 25, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் (ஜன.24) இரவு 10 முதல் இன்று (ஜன. 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


