News October 22, 2025

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: குவியும் பக்தர்கள்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

டாஸ்மாக் மாடல் அரசு: நயினார் விமர்சனம்

image

அரசு இயந்திரத்தின் மொத்த கவனத்தையும் சாராய விற்பனையில் திமுக அரசு திருப்பியதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தீபாவளியையொட்டி ₹789 கோடிக்கு மது விற்றது டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை தோலுரித்து காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். கனமழையால் டெல்டாவில் நெற்பயிர் சேதமடைந்த நிலையில், தொய்வின்றி மது விற்பதுதான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 22, 2025

சற்றுமுன்: லெஜெண்ட் காலமானார்

image

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான டாக்டர் ஏக்நாத் சிட்னிஸ் (100) வயது மூப்பால் காலமானார். வல்லரசுகளுக்கு சவால்விடும் இஸ்ரோவை உருவாக்குவதில் விக்ரம் சாராபாய்க்கு உறுதுணையாக இருந்த சிட்னிஸ், நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட்-1 உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இஸ்ரோவில் ‘ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமுக்கு முதலில் வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 22, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

image

கனமழை காரணமாக இன்று 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே, பருவமழையையொட்டி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி வளாக கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்வது, பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நாளை நடைபெறவுள்ளன. இதனை கண்காணிக்க அனைத்து HM-களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!