News October 22, 2025

கரூர் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழு

image

கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள IPS அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற Retd.நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில், TN கேடரை சேர்ந்த மூத்த IPS அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஷ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News February 1, 2026

OFFICIAL: சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் அறிவிப்பு

image

விஜய், முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் அளிப்பதாக திரைத்துறையினர் பலரும் கவலை தெரிவித்திருந்தனர். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். நீங்க மிஸ் பண்றீங்களா?

News February 1, 2026

விஜய்யின் பில்டப் ஓவராக உள்ளது: திண்டுக்கல் சீனிவாசன்

image

அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு, EX அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்துள்ளார். நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? உண்மையிலேயே White-ல் வாங்குவது எவ்வளவு? பிளாக்கில் வாங்குவது எவ்வளவு? என கேட்டுள்ளார். விஜய் வருமானத்தை மறைத்ததாக IT வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவர் பில்டப் மட்டும் ஓவராக கொடுப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் சாடியுள்ளார்.

News February 1, 2026

பயங்கரவாதிகள் தாக்குதல்.. 125 பேர் பலி!

image

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தான் பகுதியில், ராணுவத்திற்கும் BLA கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 நகரங்களில் நடந்த தாக்குதலில், 18 பாதுகாப்புப் பணியாளர்களும், 15 மக்கள், 92 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலூசிஸ்தானுக்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், அதனை இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!