News October 22, 2025
கரூர் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழு

கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள IPS அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற Retd.நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில், TN கேடரை சேர்ந்த மூத்த IPS அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஷ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Similar News
News October 22, 2025
கருணை அடிப்படையில் அரசு வேலை: இவர்களும் கோரலாம்!

நேரடி வாரிசுகள் தவிர கருணை அடிப்படையில் அரசு வேலைபெற இவர்களும் தகுதியானவர்கள்: *திருமணமான மகள், மருமகன் ஆகியோர் பெண்ணின் பெற்றோரை சார்ந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதை நிரூபித்தால் பணி நியமனம் உண்டு. *பணிக்கு செல்ல முடியாத நிலையில் திருமணமான மகள் இருந்தால், மருமகனுக்கு வேலை வழங்கப்படும். *திருமணமாகாத ஊழியர், விவாகரத்தானவர், கணவனை இழந்தவர் ஆகியோரின் பெற்றோர் (அ) சகோதர சகோதரிக்கும் பணி வழங்கப்படும்.
News October 22, 2025
DUDE படம் பார்க்க பார்க்க பிடிக்கும்: பிரதீப்

ஹீரோவாக நடித்த 3 படங்களும் ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக முன்னேறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அவரது ‘DUDE’ படம் குறித்து பேசிய அவர், சிலருக்கு இப்படத்தில் மாற்றுக் கருத்து இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். பார்க்க பார்க்க இப்படம் பிடிக்கும், இது ஒரு REWATCHABLE படமாக இருக்கும் எனவும் பிரதீப் கூறியுள்ளார்.
News October 22, 2025
26 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

சென்னை, செங்கை, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, விருதுநகரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், பள்ளி மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்புவோர் கவனமாய் இருங்கள்.