News October 22, 2025
₹343 லட்சம் கோடி.. ஆப்பிளின் வரலாறு காணாத உச்சம்

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன. ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவு விற்பனையானதால், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹343 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் ₹390 லட்சம் கோடியுடன் Nvidia உள்ளது.
Similar News
News March 24, 2026
தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேமலதா போட்டியிடுவாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்தில் நேற்று தேமுதிக மா.செ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலத்தில் பிரேமலதாவும், சாத்தூர் அல்லது விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிட வேண்டும் என மா.செ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு இருவரும் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 24, 2026
வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

சம்மர் சீசனில், வியர்க்குரு வாட்டி வதைத்து விடும். இந்த வியர்க்குருவை சமாளிக்க, பிரத்யேக பவுடர்களை பலர் பயன்படுத்துவார்கள். அந்த பவுடர்களில் Arrow root starch, Corn starch, Menthol, Zinc oxide போன்றவை இருக்க வேண்டும். அப்போது தான், அவை பயன்படுத்தும் போது, இதமாக உணர முடியும். இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாக யூஸ் செய்தால், அது சருமத்தில் பிரச்னைகளை உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர். SHARE.
News March 24, 2026
தேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ

தன்னுடைய சின்னத்திலேயே மதிமுக களமிறங்கவுள்ள தொகுதியில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக <<19452850>>செய்திகள்<<>> வந்தது. இந்நிலையில் ’சட்டப்பேரவையில் உங்கள் குரல் ஒலிக்க வாய்ப்புள்ளதா?’ வைகோவிடமே செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ஒலிக்காது’ என ஒற்றை வார்த்தையில் அவர் பதிலளித்துள்ளார். இதனால், வைகோ போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய நிர்வாகிகள் சற்று அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


