News April 17, 2024
சத்தீஸ்கரில் போலி என்கவுன்டர்கள்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நேற்று நடந்த தாக்குதலில் 29 நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகளுக்கு எதிராகத் தங்கள் அரசு திறம்பட நடவடிக்கை எடுத்து வந்ததாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார். மேலும், தற்போது மாநிலத்தில் போலி என்கவுன்டர்கள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News August 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
News August 16, 2025
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.
News August 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 16 – ஆடி 31 ▶ கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.