News October 22, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்-21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
Similar News
News October 22, 2025
இராணிப்பேட்டை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (22.10.2025) வெளியிடப்பட்ட அறிவிப்பில், மழைநீரால் நிரம்பிய குளங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீந்தல் அல்லது விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 22, 2025
ராணிப்பேட்டை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
ராணிப்பேட்டை: ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இன்று (அக்.22) நிலவரப்படி 872.87 கியூசியஸ் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போன்று மகேந்திரவாடி ஏரியில் இருந்து 139.46 கியூசியஸ், சங்கரம்பாடி ஏரிலிருந்து 37.41 கியூசியஸ் தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.