News October 22, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044 – 27237107 மற்றும் 8056221077 ஆகிய எண்களை அறிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
காஞ்சிபுரம்: 12th போதும் ரயில்வே வேலை ரெடி..

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th பாஸ் அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை பகிரவும்.
News October 22, 2025
காஞ்சிபுரம்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

காஞ்சிபுரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.