News October 22, 2025
மழை பாதித்த பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

மண்டபம் பேரூரில் நேற்றிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர் நகர், கலைஞர் நகர் பகுதிகள் மழை நீரில் சூழ்ந்தன. இங்கு தேங்கிய தண்ணீர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதிகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். பேரூர் தலைவர் ராஜா உடன் சென்றார்.
Similar News
News October 22, 2025
மண்டபம் தென் கடலில் நாளை மீன்பிடிக்க தடை

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை படி மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி உருவாகியுள்ளதால் மண்டபம் தென் கடல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு நாளை (அக்.23) வழங்கப்பட மாட்டாது. மறு உத்தரவு வரும் வரை நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அக்.21 காலை 6 மணிமுதல் இன்று அக்.22 காலை 6 மணிவரை பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம் 85 மில்லி மீட்டர், மண்டபம் 103.60 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 85 மில்லி மீட்டர், பாம்பன் 63.20 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 82.40 மில்லி மீட்டர், பல்லமோர்க்குளம் 16.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News October 22, 2025
JUST IN ராமநாதபுரம்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <