News October 22, 2025
4 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனில் இந்திய தூதரகம்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திய அரசின் அலுவலகத்தை தூதரகமாக மேம்படுத்தி, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், 2022-ல் சில அதிகாரிகளுடன் அலுவல் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News October 22, 2025
தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்புகள் குறைவு!

வங்கக்கடலில் தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்பில்லை என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இது வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
News October 22, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹300 குறைந்து ₹11,700-க்கும், சவரன் ₹93,600-க்கும் விற்பனையாகிறது. <<18068993>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 5% சரிந்திருந்த நிலையில், இந்திய சந்தையிலும் பெரிய அளவில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 22, 2025
தென் தமிழகத்தில் இது முக்கியம்: துருவ் விக்ரம்

சாதி ஒரு பேய் என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ‘பைசன்’ பட கதாநாயகன் துருவ் விக்ரமிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மாரி செல்வராஜ் தான் கடந்து வந்த பாதைகளில் இருந்தே படத்தை இயக்குகிறார் என துருவ் தெரிவித்தார். இந்தியா போன்ற ஒரு சமூக கட்டமைப்பு உள்ள நாட்டில், குறிப்பாக தென் தமிழகத்தில் சினிமா உள்ளிட்ட கலை மூலம் சாதி பிரச்னையை வெளிப்படையாக பேசுவது முக்கியம் என்றும் கூறினார்.