News October 21, 2025
BREAKING: மயிலாடுதுறையில் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ‘1077’, ‘04364-222 588’, ‘7092255255’ ஆகிய எண்கள் மூலமாக மழை, வெள்ள மற்றும் அவசர உதவிக்கு கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE
News October 22, 2025
மயிலாடுதுறை: மழை கண்காணிப்பு அதிகாரி நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் கவிதா ராமு இ.ஆ.ப கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News October 22, 2025
மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் உருவாங்கியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க!