News October 21, 2025

பால் நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

image

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையில்; நாளை அக்.22ம் தேதி புதன்கிழமை தமிழக முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடர் மழையின் காரணமாக, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூடி அடுத்த போராட்ட தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News

News October 22, 2025

சேலம்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

image

சேலம் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க! இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 22, 2025

சேலம்: மழையால் பாதிப்பா..? உடனே CALL!

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க அந்தந்த மண்டல கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைய அலுவலகம்: 0427-2212844, கொண்டலாம்பட்டி மண்டலம்: 0427 -2461313, அஸ்தம்பட்டி மண்டலம்: 0427 -2310095, சூரமங்கலம் மண்டலம்: 0427-2387514, அம்மாபேட்டை மண்டலம்: 0427 -2263161. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 22, 2025

சேலம்: 4 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

image

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அகரமகால் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்க வைக்க போதுமான முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!