News October 21, 2025

விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

வங்கி கடன்… வந்தது HAPPY NEWS

image

2017-க்கு பிறகு, கடந்த செப்டம்பரில் நாட்டின் பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால், வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான EMI குறைய வாய்ப்புள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். SHARE IT.

News October 22, 2025

சூப்பர் மாரி.. வாழ்த்திய ரஜினிகாந்த்

image

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், மாரி செல்வராஜுக்கு போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ‘படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று ரஜினி கூறியதாக மாரி, தனது X பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

News October 22, 2025

அழுதது நடிப்பா? அன்பில் மகேஸ் விளக்கம்

image

கரூர் துயரின்போது அன்பில் மகேஸ் அழுதது ட்ரோல் ஆனது. இதற்கு விளக்கமளித்துள்ள அவர், உணர்ச்சிகளும் அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும் என்றார். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றினால் விலங்குக்கு சமம், அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றினால் மரத்திற்கு சமம் என வள்ளுவர் கூறியதை எடுத்துரைத்தார். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதர், ஒரு மனிதனாக மாற மறந்துவிட்டான் என்றார்.

error: Content is protected !!