News October 21, 2025

செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கடலூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு விடப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News April 8, 2026

திமுக குறித்து மம்தா அப்படி பேசவில்லை: சகரிகா கோஸ்

image

பாஜக – திமுக மறைமுக கூட்டு வைத்துள்ளதாக மம்தா விமர்சித்ததாக வீடியோ வெளியாகி, TN அரசியலில் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள TMC ராஜ்யசபா துணை தலைவர் சகரிகா கோஸ், மம்தாவின் பேச்சு தேசிய ஊடகங்களில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மேலும், அதிகாரங்களை குவிக்கும் பாஜகவுக்கு எதிராக போராடும் திரிணாமுல், திமுக வரும் தேர்தலில் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.

News April 8, 2026

ஸ்டாலின் சார் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு: EPS

image

வேளச்சேரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து EPS பிரசாரம் செய்தார். அப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்களே செய்தார்களா என கேள்வி எழுப்பிய அவர், ‘ஸ்டாலின் சார் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு’ என பெண்கள் கிண்டல் செய்யும் அளவில்தான் திமுக ஆட்சி இருந்ததாக விமர்சித்தார். மேலும், தீயசக்தி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவோம் எனவும் ஆவேசமாக கூறினார்.

News April 8, 2026

தென்மாநில உரிமைக்கு உலை வைக்கும் பாஜக: ஸ்டாலின்

image

தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய பாஜக அரசு ரகசியம் காப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கிடையே அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு என்ன அவசியம் என்றும் கேட்டுள்ளார். தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் திட்டத்தை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என கூறியுள்ளார்.

error: Content is protected !!