News October 21, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News January 19, 2026

அதிமுகவில் சசிகலா? இன்று முக்கிய அறிவிப்பா?

image

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என EPS கூறினாலும், அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என சசிகலா சொல்லி வருகிறார். இந்நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கள்ளக்குறிச்சி அரசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சசிகலா அவரது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதனால் திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

News January 19, 2026

கண்கள் அடிக்கடி அரிக்கிறதா? இத கவனிங்க!

image

காலநிலை மாற்றம், தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் அரிப்பு, எரிச்சலை தடுக்க சில இயற்கை டிப்ஸ்: *ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து கண்கள் மீது ஒத்தடம் கொடுக்கலாம். *பாலை துணியில் நனைத்து கண்களை துடைத்து வரலாம் *வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது வைக்கலாம் *வெந்நீரில் உப்பு கலந்து, துணியில் நனைத்து கண்கள் மீது வைக்கலாம் *தொற்று அதிகம் இருந்தால் டாக்டரை அணுகுங்கள்.

News January 19, 2026

எந்த கட்சிக்கும் அடிபணியாமல் எடுத்த முடிவு: பிரவீன்

image

TN காங்கிரஸில் நீண்ட இழுபறிக்கு பிறகு <<18894402>>71 மாவட்ட<<>> தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரவீன் சக்ரவர்த்தி, மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை & தன்னாபிமானத்துடன் ஒவ்வொருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!