News October 21, 2025
சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் <<18066068>>பள்ளிக்கல்வித் துறை<<>> உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு மாணவர்கள் மழை கோட்டுகள், குடைகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க HM-களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மேற்கூரைகள் உறுதியாக இருக்கிறதா என ஆய்வு செய்யுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. *உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.
News October 22, 2025
NATIONAL ROUNDUP: பிஹாரில் 1,314 வேட்பு மனுக்கள் ஏற்பு

▶சபரிமலை கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் ▶பிஹார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் 1,314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ▶பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தகவல் ▶கேரளாவில் வெளுத்து வாங்க தொடங்கிய கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.
News October 22, 2025
இந்தியா – வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள் ரத்தா?

வங்கதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த பிறகு, இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது எனவும் வெளியுறத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.