News October 21, 2025
Ombrophobia: மழையை பார்த்து பயப்படும் மனிதர்கள்

மழையை பார்த்தால் சிலருக்கு அச்சம் ஏற்படும். அதுவே Ombrophobia எனப்படுகிறது. இது பொதுவாக இளம் பருவத்தினர், குழந்தைகளிடையே காணப்படுகிறது. மழை பெய்யும் என செய்திகள் வெளியானால், அன்று எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வெளியில் செல்ல மாட்டார்கள். படபடப்பு, நடுக்கம், பயம், மார்பு வலி, தலைச்சுற்றல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதற்கான சிகிச்சை எதுவும் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 22, 2025
நினைச்சு பார்க்கமுடியாத நன்மைகளை தரும் ‘நன்னாரி’

நன்னாரி என்பது லெமன் ஜூஸில் சுவைக்காக சேர்க்கப்படும் சாதாரண பொருள் அல்ல. அது பல பிரச்னைகளுக்கு அருமருந்தாகிறது. ➤நன்னாரி வேரை பொடியாக்கி தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்தம் தணியும் ➤அரை ஸ்பூன் நன்னாரி பொடியை பாலில் கலந்து குடித்துவர மூலச்சூடு, நீர்க்கடுப்பு நீங்கும் ➤அரை ஸ்பூன் நன்னாரி வேர் பொடியுடன் 20 உலர் திராட்சை சேர்த்து கஷாயம் வைத்து இரவு குடித்துவந்தால் மலச்சிக்கல் தீரும். SHARE.
News October 22, 2025
மழைக்காலத்தில் துணி காய்வதற்கு சூப்பர் டிப்ஸ்

மழைக்காலம் வந்தாலே பலருக்கும் முதலில் தோன்றுவது, துணி எப்படி காயும்? ஈரமாவே இருந்தால் துர்நாற்றம் வீசுமே என்பது தான். இதற்காக பலரும் துணிகளை மூட்டையாக சேர்த்துவைத்து, மழை விட்டபிறகு மொத்தமாக துவைப்பார்கள். மழைக்காலத்திலேயே துவைக்கும் துணிகளை காயப்போட்டு எடுக்க சூப்பர் டிப்ஸ்களை மேலே SWIPE செய்து பாருங்கள். நண்பர்கள், உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 22, 2025
14 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: IMD

TN-ல் காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறியுள்ளது. அதேபோல், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். SHARE IT.