News April 17, 2024
பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 26, 2025
நாகை: இதை செய்தால் கரண்ட் Bill வராது!

நாகை மக்களே, உங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு (Solar Panel) பொருத்துவதன் மூலம் மாதம் ரூ.2,000-3,000 வரை மின்கட்டணத்தை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<
News September 26, 2025
நாகை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இயற்கை பேரிடர் கோரிக்கை 04365-1077 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW !
News September 26, 2025
நாகை: வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

நாகை மாவட்டம் முழுவதும் குறுவை பருவத்துக்காக 95 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்ட நெல்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் எச்சரித்துள்ளார். SHARE NOW!