News October 21, 2025
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் குபேர பூஜை

நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு குபேர பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Similar News
News October 22, 2025
நாகை: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை அக்.23ம் தேதி காலை 9 மணிக்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, அசல் நகல் , தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் வெற்றி பெறுபபர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்படயுள்ளது.
News October 22, 2025
நாகையில் இலவச கணினி டேலி பயிற்சி

நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள ஐ.ஒ.பி.ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், இலவசமாக கணினி டேலி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 / 8870940443 / 9047710810 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் தொடர்புகொள்ள நிறுவன இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.