News October 21, 2025
உழவர்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி

பருவமழை காரணமாக நெல் கொள்முதலை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியில் 70% அறுவடை முடிந்தும், 60% நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நெல் ஈரப்பத வரம்பை 25%ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் உழவர்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக சாடியுள்ளார்.
Similar News
News January 19, 2026
தேனி: 2 வயது குழந்தை மற்றும் பெண் சென்ற பைக் விபத்து

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபினாஷ் என்பவர் ஓடைப்பட்டி பகுதியில் அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் தங்கி வேலை செய்து வருகின்றார். தம்பதியர் நேற்று (ஜன.18) பைக்கில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு திரும்பிய பொழுது அடையாளம் தெரியாத பைக் இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை மற்றும் தாயார் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.
News January 19, 2026
BREAKING: டெல்லியில் விஜய்.. CBI குறுக்கு விசாரணை!

CBI வளையத்தில் சிக்கியுள்ள விஜய், சற்றுமுன் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் 2-வது நாளாக ஆஜராகியுள்ளார். கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கில் கடந்த 12-ம் தேதி விஜய் அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக இன்று குறுக்கு விசாரணையை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே தவெக நிர்வாகிகள் அளித்த தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது விஜய்க்கு பெரும் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.
News January 19, 2026
வாக்காளர் பட்டியல்: ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு

TN-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது. SIR பணிகளில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், அவர்களின் மேல்முறையீடு, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.


