News October 21, 2025

கடலூர்: பனை மரம் முறிந்து விழுந்து பசுமாடு பலி

image

பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம்(50), இவர் தனது வீட்டில் பின்னால் நேற்று சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு ஒன்றை கட்டி வைத்துள்ளார். அப்போது பெய்த கனமழையினால் அதற்கு அருகே இருந்த பனை மரம் முறிந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சமபவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 22, 2025

கடலூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

image

வங்கக்கடலில் உருவாங்கியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க!

News October 22, 2025

கடலூர்: மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

image

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலை சேர்ந்தவர் சம்பத்குமார்(57). இவர் சாவடி சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால் திடீரென்று பிரேக் போட்ட சம்பத்குமார் தவறி கீழே விழுந்தார்.
இதில், காயமடைந்த அவரை மருத்துவமனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 22, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.15) இரவு 10 மணி முதல் இன்று (அக்.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!