News October 21, 2025
பருவமழையை எதிர்கொள்ள IAS அதிகாரிகள் நியமனம்

TN-ல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு IAS அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தமது மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க CM அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 22, 2025
விஜய் அரசியலுக்கு அடுத்தடுத்து இடர்களா?

செப்.27-ல் நிகழ்ந்த கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் வெளியில் தலைகாட்டவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஆன்லைன் மூலமே அனுப்பிவிட்டார். 16 நாள்கள் துக்கம், தீபாவளி விடுமுறை என 25 நாள்கள் கடந்துவிட்டன. தற்போது கனமழையும் பெய்ய தொடங்கிவிட்டது. இதனால் விஜய்யின் கரூர் பயணம் மட்டுமல்லாது, அவரது அரசியலுக்கும் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் வருவதாக தவெகவினர் புலம்புகின்றனர்.
News October 22, 2025
BREAKING: இன்று மாலை உருவாகிறது.. கனமழை அலர்ட்

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இது, வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புகள் குறைவு எனவும், அதேநேரம் நிலப்பகுதிக்கு அருகே உள்ளதால் கனமழை பெய்யும் எனவும் IMD தெரிவித்துள்ளது.
News October 22, 2025
BREAKING: நீலகிரி சுற்றுலாத் தளங்கள் மூடல்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழை பெய்துகொண்டே இருப்பதால், மலைப்பாதையில் அவர்கள் ஊர் திரும்புவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.