News October 21, 2025
செம்பரம்பாக்கம் ஏரியில் மாலை 4 மணிக்கு நீர் திறப்பு

காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு நீர் திறக்கப்பட உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20.32 அடியை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் திருமுடிவாக்கம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News October 22, 2025
காஞ்சிபுரம்:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம், இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 22, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044 – 27237107 மற்றும் 8056221077 ஆகிய எண்களை அறிவித்துள்ளார்.
News October 22, 2025
காஞ்சிரம் இரவு ரோந்து பணி விவரம்

காஞ்சிபுரத்தில் இன்று (அக்.21) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து அதிகாரங்களின் விவரம் வெளியாகி உள்ளது. காவல் நிலையம் வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்படுகிறது. இதனை மக்கள் அனைவரும் உபயோக கொள்ளவும். இது அவசர காவல்துறை நூறு மற்றும் இதில் உள்ள தொடர்பு எண்ணில் அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க