News October 21, 2025
போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: EPS

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு <<18061217>>மழை<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் IMD அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News March 18, 2026
2 மாத கர்ப்பத்துடன் தமிழ் நடிகை மரணம் REWIND

தமிழ், தெலுங்கு சினிமாவில் 90s காலகட்டத்தில் ஜொலித்த நடிகை செளந்தர்யா, 31 வயதிலேயே விமான விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், இறக்கும் தருவாயில் 2-3 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார் என்ற செய்தி மீண்டும் வைரலாகி ரசிகர்களை உருகச் செய்துள்ளது. இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதை இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் அவர் கூறியது பெரும் சோகம்.
News March 18, 2026
கருப்பு ரிலீஸ்.. தேதி குறிச்சாச்சு

இப்ப வருமோ, எப்ப வருமோ என ‘கருப்பு’ பட ரிலீஸை எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோடை விருந்தாக மே.14-ம் தேதி கருப்பு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். த்ரிஷா, சிவாதா, பிரகாஷ் ராஜ், சுவாசிகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியிருந்தது.
News March 18, 2026
அஇபுதமமுக விருப்பமனு.. அப்செட்டில் சசிகலா?

சமீபத்தில் அஇபுதமமுக கட்சியில் இணைந்த சசிகலா, இன்று முதல் தனது இல்லத்தில் விருப்பமனு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மிகவும் சொற்ப அளவிலான ஆதரவாளர்களே விருப்ப மனுவை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. எளிதில் விருப்பமனு கிடைத்ததால், அன்னபோஸ்டாக சீட் கிடைக்குமென விருப்ப மனு பெற்றவர்கள் நம்புகின்றனராம். இதனால், சசிகலா அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


