News October 21, 2025
கடலூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
Similar News
News April 3, 2026
பொது பார்வையாளர் மாற்றம் – ஆட்சியர் தகவல்

புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த கார்த்திகே தான்ஜீ இந்திய தேர்தல் ஆணையத்தால் மாறுதல் செய்யப்பட்டு, தற்போது அசிதா மிஸ்ரா பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆயத்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 3, 2026
கடலூர்: வீடு வீடாக தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல்

மகளிர் திட்டம்- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடந்த தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவு பதிவான 79 மற்றும் 82-வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நேற்று நூதன விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தேர்தல் திருவிழா அழைப்பிதழை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News April 3, 2026
நேருக்கு நேர் மோதிய பைக்குகள் – ஒருவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் மங்களூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(48). இவர் பைக்கில்
ஆவட்டியிலிருந்து மங்களூர் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவா என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக்குடன் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து ஏற்பட்டது. இதில், வேல்முருகன் பலத்த காயம் அடைந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


