News October 21, 2025

கரூர்: விஷப் பூச்சி கடித்து ஒருவர் பலி!

image

கரூர் ஆண்டான் கோவில் கிழக்கு அமராவதி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(37). இவர் அழகு சாதன விற்பனை கடையில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று முன்தினம் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது விஷ பூச்சி முழங்காலில் கடித்ததில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று(அக்.20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 7, 2025

கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கரூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News November 7, 2025

கரூரில் இன்று பல இடங்களில் மின்தடை…!

image

கரூர் மாவட்டம்; புலியூர், புகழூர், கரூர் டவுன், அரவக்குறிச்சி, ஆண்டிச்செட்டிப்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட 6 துணை மின்நிலையங்களில் நிலையங்களில் இன்று (நவ.07) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

கரூரில் 3 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம், குளித்தலை சிந்தாமணிப்பட்டி பகுதியில் வெளியூர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதின் (48), கமருதீன் (58), மற்றும் குருணிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த முஜீப் ரகுமான் (50) ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!