News October 21, 2025
விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News October 22, 2025
விழுப்புரம் காவல்துறை இளைஞர்கள் தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள் , ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறைக்கு தகவல் அளிப்பதோடு, தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்குவதற்கு உதவுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர உதவிக்கு 1077,04146-223265,9498100485.
News October 22, 2025
விழுப்புரம் பாண்டியன் நகர் வடிகால் ஆட்சியார் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வெளியேற்றும் வடிகால் வாய்க்காலை இன்று (அக்.21) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை காரணமாக நீர் தேக்கம் ஏற்படாத வகையில் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.. பொதுமக்கள் தேவைகள் பற்றியும் அதிகாரிகள் தகவல் பெற்றனர்.
News October 21, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.21) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.