News April 17, 2024
பிரதமர் தமிழகம் வருவதால் மற்ற கட்சிகளுக்குப் பயம்

பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு வருவதால் மற்றக் கட்சிகளுக்குப் பயம் ஏற்பட்டுள்ளதாகத் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதைச் செலுத்திய அவர், வெற்றி பெற்றால் யார் தலைமை வகிப்பார் என்று கூடச் சொல்ல முடியாத நிலையில், I.N.D.I.A கூட்டணி உள்ளதாகச் சாடினார். மேலும், நம் நாட்டை யார் பலம் வாய்ந்த நாடாக மாற்றுவார் என்பதற்கான தேர்தல் இது எனவும் கூறினார்.
Similar News
News April 30, 2025
தேமுதிக பொதுக்குழு இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி விவகாரம் குறித்தும் அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
News April 30, 2025
பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் கூடாது.. அதிரடி உத்தரவு!

மதுரையில் தனியார் நர்சரி பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் சங்கீதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை விடுமுறை நாள்களில் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், TN முழுவதும் வகுப்புகள் நடக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.
News April 30, 2025
க.பொன்முடி வெளியே.. கௌதம சிகாமணி உள்ளே?

2026-ல் பொன்முடியை கழட்டிவிடும் முடிவில் இருக்கிறதாம் திமுக. சர்ச்சை பேச்சால் கட்சிப் பதவியை இழந்தவர், இப்போது அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கிறார். இந்நிலையில், பொன்முடிக்கு பதிலாக 2026-ல் அவருடைய மகன் கௌதம் சிகாமணி திருக்கோயிலூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்கிறார்கள். இதனால் தான், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லையாம். எதிர் கோஷ்டிகளை மகனை கொண்டு சமாளிப்பாரா பொன்முடி?