News October 21, 2025
வால்பாறையில் தொடரும் அவலம் கண்டுகொள்ளுமா அரசு?

கோவை வால்பாறையில், கல்லார்குடி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதிகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்கு ரோடு, மின்சாரம், நடைபாதை, வீடுகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கண்டுகொள்ளுமா அரசு?
Similar News
News October 22, 2025
கோவையில் வீடு தேடி வரும் அபராதம்

கோவை மாநகராட்சியில் தினமும், 1,200 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, வெள்ளலுார் கிடங்கில் குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பொது இடங்களில் குப்பையை வீசிவிட்டு செல்பவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து, ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை, அபராதம் விதிக்கப்படும். இதனை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 22, 2025
ஊட்டி மலை ரயில் சேவை நாளையும் ரத்து

கனமழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் அன்றைய தினம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் பணிகள் இன்னும் நிறைவடையாததால் நாளை(அக்.21) அன்றும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 22, 2025
கோவையில் நாளை விடுமுறை இல்லை

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நாளை(அக்.22) கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.