News October 21, 2025
நாகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 16, 2026
நாகை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 16, 2026
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News February 16, 2026
நாகையில் நாளை கடையடைப்பு போராட்டம்

நாகப்பட்டினம் பகுதியை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும், கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தியும் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில், நாகையில் நாளை 17-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
இதையடுத்து நாகப்பட்டினம் முழுவதும் வர்த்தகர்கள் நாளை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


