News October 21, 2025

கிருஷ்ணகிரி: காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்

image

அக்டோபர் 21 அன்று அனுசரிக்கப்படும் காவலர்கள் வீர வணக்க தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் உயிரிழந்த 191 காவலர்களுக்கு அணிவகுப்பு&துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Similar News

News February 16, 2026

கிருஷ்ணகிரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

ஒசூர் புதிய மாவட்ட மருத்துவமனை திறப்பு!

image

ஒசூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.16) காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இப்பகுதி மக்களின் உயர்தர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

News February 16, 2026

ஓசூரில் துணிகர சம்பவம்!

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்த உதயகுமார் (22) ஓசூரில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் உதயகுமாரை மிரட்டி ரூ.300 மற்றும் செல்போனை வழிப்பறி செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த உஸ்மர் (24) என்பது தெரியவந்தது.

error: Content is protected !!