News October 21, 2025
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடிக்க சென்றவர்களும் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத் துறையினர், போலீஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்கின்றனர்.
Similar News
News October 21, 2025
போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: EPS

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு <<18061217>>மழை<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் IMD அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 21, 2025
தியேட்டரில் மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணி!

2001-ல் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படம் அதிரிபுதிரி வெற்றியடைந்தது. விஜய்- சூர்யாவின் அசத்தலான நடிப்பு, துள்ளலான பாடல்கள், நண்பர்களை சுற்றி நிகழும் சூப்பரான திரைக்கதை ஆகியவற்றுடன், வடிவேலு காமெடி கலாட்டாவை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி தீர்த்தனர். இந்த படம் வரும் நவம்பர் 21-ம் தேதி ரீரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணி காமெடியை தியேட்டரில் ரசிக்க ரெடியா?
News October 21, 2025
பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட <<18063262>>கலெக்டர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை<<>> நடத்தினார். அப்போது, அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுறுத்தினார். மேலும், மழையின் தீவிரத்தைக் கண்காணித்து நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகவே, இரவுக்குள் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.