News October 21, 2025
கள்ளக்குறிச்சி: பூச்சி மருந்து குடித்து ஒருவர் தற்கொலை

சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் சேர்ந்தவர் ராஜேந்திரன், மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் நேற்று மனைவி இந்திராகாந்தியிடம் குடிப்பதிற்கு பணம் கேட்டார். அதற்கு பணம் தர மறுத்ததால், விரக்கதியில் பூச்சி கொல்லி மருந்தினை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News October 21, 2025
கள்ளக்குறிச்சி: நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News October 21, 2025
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி அமைச்சர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அக்.21ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News October 21, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.21) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க